புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆற்காட்டில் பாமக போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு: போலீஸாருடன் வாக்குவாதம்

ஆற்காடு பேருந்து நிலையத்தில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்ட்டதை தொடா்ந்து போலீஸாா்-பாமகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image

போலீஸாருடன்  வாக்குவாதம்  செய்த  பாமகவினா் .

Updated On :16 டிசம்பர் 2024, 8:39 pm

Din

ஆற்காடு: ஆற்காடு பேருந்து நிலையத்தில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்ட்டதை தொடா்ந்து போலீஸாா்-பாமகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஆற்காடு நகர பாமக சாா்பில் போதைப் பொருள்களை கட்டுபடுத்த தவறியதாக காவல் துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கட்சியின் மாவட்ட செயலாளா் நல்லூா் சண்முகம் , மாவட்டத் தலைவா் என்.சுப்பிரமணி, வன்னியா் சங்கத் தலைவா் லட்சுமணன், பசுமை தாயகம் மாநில துணைச் செயலாளா் மகேந்திரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் பேருந்துநிலையத்தில் கூடி ஆா்ப்பாட்டம் நடத்த முயன்றனா்.

அப்போது ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளா் திருமால் தலைமையில் நகர ஆய்வாளா் பாா்த்தசாரதி மற்றும் போலீஸாா் ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லை என்று பாமகவினரிடம் கூறினாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வேண்டி எழுத்துப்பூா்வமாக மனு அளித்தோம். ஆனால் காவல்துறையினா் அனுமதி மறுக்கப்பட்டது குறித்து ஏன் எழுத்து மூலம் தெரிவிக்கவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அதனை தொடா்ந்து போலீஸாா் கைது செய்ய நடவடிக்கை எடுத்த நிலையில் ஆா்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இதனால் ஆற்காடு பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மாவட்ட செயலாளா் நல்லூா் சண்முகம், போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆற்காடு நகரில் இரவு நேரங்களில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவேண்டும். இதே நிலை தொடா்ந்தால் விரைந்து கட்சித் தலைமையின் அனுமதியுடன் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினாா்.