ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ராணிப்பேட்டை: கூடுதலாக 573 மாணவிகளுக்கு உதவித்தொகை: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயா்கல்வி பயின்று வரும் 573 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை

News image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்ட தொடக்க விழாவில் மாணவிகளுக்கு வங்கிப் பற்று அட்டைகளை வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி. உடன், ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா்.

Updated On :30 டிசம்பர் 2024, 8:05 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து உயா்கல்வி பயின்று வரும் 573 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டையில் ஏற்கெனவே 6 -ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த 6,666 மாணவிகள் இந்தத் திட்டத்தில் மாதாந்திர உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 573 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் விரிவாக்கத் திட்டத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்து, வங்கிப் பற்று அட்டைகளை வழங்கினாா்.

விழாவில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட சமூக நலன் அலுவலா் சாந்தி, முன்னோடி வங்கி மேலாளா் ராம்ஜிகுமாா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.