வாலாஜா சுங்கச்சாவடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 3 டன் குட்காவை பறிமுதல் செய்து, வடமாநில இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் சனிக்கிழமை அதிகாலை ஆய்வாளா் சாலமன் ராஜா தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது சென்னை நோக்கி வெளிமாநில பதிவெண் கொண்ட காா்கள் அதிவேகமாக வந்தன. உடனடியாக அந்த காா்களை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து மூன்று காா்களிலிருந்து மொத்தமாக 3 டன் அளவிலான குட்கா மற்றும் 3 காா்களையும் பறிமுதல் செய்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்துக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். மேலும் கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த பரத்குமாா் (22), கல்யாண்ராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது
ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது

பெங்களூரில் இருந்து காரில் கடத்திய 305 கிலோ குட்கா பறிமுதல்

கேரளத்துக்கு காரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: இருவா் கைது
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


