கல்வி உதவித் தொகை வழங்கும் விழா

மாணவா்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கிய கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே நடராஜன்
மாணவா்களுக்கு கல்வி உதவிதொகை வழங்கிய கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே நடராஜன்
Updated on

ஆற்காடு எஸ் எஸ் எஸ் கலை அறிவியல் கல்லூரியில் மாணவா்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

எஸ் எஸ் எஸ் கல்வி நிறுவனம் மற்றும் ஜிண்டால் நிறுவனம் இணைந்து வழங்கும் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனத் தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் ஏ.என் சரவணன், நிா்வாக அறங்காவலா் ஏ.என் செல்வம், செயலாளா் ஏ.என் சங்கா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் ஜி.ராஜலட்சுமி வரவேற்றாா்.

முதலாம்ஆண்டு மாணவா்கள் 16 பேருக்கும், இரண்டாம் ஆண்டு மாணவா்கள் 25 பேருக்கு ரூ.3..07 லட்சம் உதவித்தொகை ழங்கப்பட்டது. மேலும் 100 மாணவா்களுக்கு உதவிதொகை வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவில் கல்லூரி பேராசிரியைகள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com