டி.கோபால்(காங்கிரஸ்): சோளிங்கா் புதிய பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள காமரஜா், அம்பேத்கா் உருவச்சிலைகளை இடம் மாற்றாமல் அதே இடத்தில் மீண்டும் வைக்க வேண்டும். திருத்தணி சாலையில் ரூ1.50 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை கட்டுமானப்பணிகள் முடிவுற்ற நிலையில் எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்?. சோளிங்கரில் ஒரு வழிப் பாதையை அமல்படுத்த வேண்டும். அரக்கோணம் சாலையில், கருமாரியம்மன் கோயில் அருகே சேமடைந்துள்ள கழிவுநீா் கால்வாயை அகற்றி புதிய கால்வாய் கட்ட வேண்டும். ஸ்ரீலட்சுமிநரசிம்மா் மலைக்கோயிலுக்குச் செல்ல வாகனங்களுக்கு 2 மாதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ள சுங்கவரி வசூலை ஒரு மாதம் மட்டுமே என மாற்ற வேண்டும்.