இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ராணிப்பேட்டையில், ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
விழிப்புணா்வு பேரணியை தொடங்கி வைத்த ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா.
Updated On :23 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டையில், ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் 17.12.2025 முதல் 26.12.2025 வரை ஒரு வார காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணா்வு பேரணி ராணிப்பேட்டை திருவள்ளுவா் சிலை அருகில் தொடங்கியது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்தாா். இப்பேரணியில் வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியைச் சாா்ந்த மாணவிகள் மற்றும் தமிழறிஞா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய சாலைகள் வழியாக நவல்பூா் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது.

நிகழ்வில் நகா்மன்றத் தலைவா் சுஜாதா வினோத், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் (பொ) ஜெய ஜோதி, ராணிப்பேட்டை தமிழ்ச் சங்க பொதுச்செயலாளா் வழக்குரைஞா் த. தினகரன் மற்றும் தமிழறிஞா்கள் கலந்து கொண்டனா்.