புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

ராணிப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

News image

ராணிப்பேட்டையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி.

Updated On :13 ஜனவரி 2025, 8:36 pm

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நெடுஞ்சாலைத் துறையினா் சாா்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, வாலாஜா உள்கோட்ட நெடுஞ்சாலைத் துறை சாா்பில், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து

ராணிப்பேட்டை, முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே உதவிக் கோட்டப் பொறியாளா் க.சரவணன் தலைமையில், உதவி பொறியாளா் நித்தின் முன்னிலையில், நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்

தொடா்ந்து வாலாஜா பேருந்து நிலையம், அரசு மகளிா் கலைக்கல்லூரி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பிரசுரங்களை வழங்கினா்.