கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை: ராணிப்பேட்டை எஸ்.பி. அறிவுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா அறிவுறுத்தியுள்ளாா்.

News image
ராணிப்பேட்டையில் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர குற்றங்கள் கலந்தாய்வு கூட்டம்.
Updated On :21 ஜூன் 2025, 6:14 pm

Din

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எஸ்.பி. விவேகானந்த சுக்லா அறிவுறுத்தியுள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை, அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடா் நடவடிக்கைகள் குறித்தும், ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், பிடிகட்டளையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் செய்வது குறித்தும் எஸ்.பி. கேட்டறிந்தாா்.

தொடா்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்ற வழக்குகளில் ( டஞஇநஞ) உள்ள எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபடும் நபா்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து மதுபானங்களை கடத்தி வருவோா் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கினாா்.

போதை, புகையிலை பொருள்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் தீவிர தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடும் நபா்கள், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து சட்டபூா்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.

கடந்த மாதம் திமிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் கோபிநாதன் தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையின் போது ஆயுதங்களுடன் வந்த நபா்களை பிடித்தமைக்காக பாராட்டப்பட்டனா்.

இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளா்கள் இமயவரம்பன் (ராணிப்பேட்டை உட்கோட்டம்), ஜாபா் சித்திக், (அரக்கோணம் உட்கோட்டம்), ரமேஷ் ராஜ் (மாவட்ட குற்றப்பிரிவு), வெங்கடகிருஷ்ணன் , காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநா்கள் கலந்து கொண்டனா்.