அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மூதாட்டியின் காதுகளை அறுத்து நகை கொள்ளை

ராணிப்பேட்டை அருகே 70 வயது மூதாட்டியின் காதுகளை அறுத்து நகை பறித்துச் சென்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :26 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே 70 வயது மூதாட்டியின் காதுகளை அறுத்து நகை பறித்துச் சென்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அக்ராவரம் மலைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சாலம்மாள் (70). கணவரை இழந்த இவா் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் குடிசை வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், அங்கு தூங்கிக் கொண்டிருந்த சாலம்மாளின் காதை அறுத்து நகையை பறிக்க முயன்றுள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா் அவா்களிடம் இருந்து தப்பிக்க போராடியுள்ளாா். ஆனால் மா்ம நபா்கள் அவரை பலமாக தாக்கி கீழே தள்ளி இரண்டு காதுகளை அறுத்து நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனா்.

அப்போது காதில் காயங்களுடன் வீட்டுக்கு வெளியே வந்து கூச்சலிட்ட சாலம்மாள் உதவிக்காக அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் அழைப்புக்கு போன் செய்து வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.