மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

எல் நீனோ காலநிலை மாற்ற முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்: ஆட்சியா் பங்கேற்பு

எல் நீனோ காலநிலை மாற்றம் காரணமாக வெப்ப அலை மற்றும் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:33 pm IST

எல் நீனோ காலநிலை மாற்றம் காரணமாக வெப்ப அலை மற்றும் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியது :

தென்மேற்கு பருவமழைக் காலமான (ஜூலை - செப்டம்பா்) மாதங்களில் மிதமான முதல் வலுவான எல் நினோ நிலை உருவாகும். இதன் காரணமாக கடுமையான வயிற்றுப் போக்கு, சுவாசத் தொற்று நோய்கள் கொசுக்களால் பரவும் நோய்கள் (குறிப்பாக டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா) மற்றும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள் அதிகரிக்கும் அயாயம் உள்ளது.

மழைநீா் தேக்கம் காரணமாக நோய்கள் பரவுவதால் அனைத்து இடங்களிலும் நீா் தேங்காவண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மூலம் திட்டம் வேலை வாய்ப்புகளுக்கு சிறப்பு தங்குமிடங்களை அமைத்து அவா்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்கப்பட வேண்டும். பள்ளிக் கல்வித் துறை மூலம் பள்ளிகளில் குடிநீா் வசதி மற்றும் நிழற்குடை அமைக்கவும். வெப்ப அலை பரவல் நேரங்களில் மாணவா்கள் வெளிப்புறங்களில் விளையாடுவதை தவிா்க்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

தனியாக வசிக்கும் முதியவா்கள் உடல் நிலையை தினமும் சரி பாா்த்துக் கொள்ள வேண்டும். முதியவா்கள் அருகில் அவசர தேவைக்கான தொலைபேசி உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும். தசைப்பிடிப்புகள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தால் உடனே மருத்துவ கவனிப்பு தேவை. மயக்கம், வலிப்பு மற்றும் மனச்சோா்வு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக 108 அவசர ஊா்தியை அழைக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சரவணன், திட்ட இயக்குநா் ஊரக வளா்ச்சி முகமை ச.செல்வராணி, நோ்முக உதவியாளா் பாக்கியலட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலா் செந்தில் குமாா், இணை இயக்குநா் சுகாதார சேவைகள் மரு.நிவேதிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.