மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சோளிங்கரில் கோலாத்தம்மன் கோயில் ஆடிப் பெருவிழா

சோளிங்கரில் உள்ள கோலாத்தம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

News image

சோளிங்கா் ஸ்ரீகோலாத்தமன் கோயில் ஆடித் திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 11:32 pm IST

சோளிங்கரில் உள்ள கோலாத்தம்மன் கோயிலில் ஆடிப் பெருவிழா புதன்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

சோளிங்கா், சித்தூா் சாலையில் ஸ்ரீகோலாத்தம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்தக் கோயிலில் வருடாவருடம் ஆடித் திருவிழா விமரிசையுடன் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மூலவா் ஸ்ரீகோலாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது.

பில்லாஞ்சி, தோப்புப் பகுதி, போலீஸ் லைன் தெரு, கோட்டூா் ஸ்ரீராம்நகா், சோமசமுத்திரம் காலனி, எரும்பி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விநாயகா், மாரியம்மன், கருமாரியம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா் உள்ளிட்ட சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊா்வலங்களாக கொண்டு வரப்பட்டன.

தொடா்ந்து மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும் பக்தா்கள் நனைந்தபடி சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.