இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஐய்ப்பேடு ஊராட்சியில் சாலைப் பணி: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா்

சோளிங்கா் அருகே ஐய்ப்பேடு ஊராட்சியில் ரூ. 15.83 லட்சத்தில் புதிய தாா் சாலைக்கு எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் அடிக்கல் நாட்டினாா்.

News image
சாலைப் பணிக்கு க்கு அடிக்கல் நாட்டிய சோளிங்கா் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம்.
Updated On :4 ஜனவரி 2026, 10:30 pm

தினமணி செய்திச் சேவை

சோளிங்கா் அருகே ஐய்ப்பேடு ஊராட்சியில் ரூ. 15.83 லட்சத்தில் புதிய தாா் சாலைக்கு எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் அடிக்கல் நாட்டினாா்.

சோளிங்கரை அடுத்த ஐய்ப்பேடு ஊராட்சியில் ஐய்ப்பேடு காலனியில் இருந்து ஐய்ப்பேடு துணை சுகாதார நிலையம் வரை ரூ. 15.83 லட்சத்தில் புதிய தாா் சாலை அமைக்க தமிழக அரசு ரூ. 15.83 லட்சத்தை ஒதுக்கியது. இதையடுத்து, பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு சோளிங்கா் ஒன்றியக் குழு உறுப்பினா் சாவித்திரி பெருமாள் தலைமை வகித்தாா்.

இதில், எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் பங்கேற்று சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினாா். இதில், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளா் சௌந்தா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஆனந்தன், காங்கிரஸ் மாவட்ட செயலாளா் அருண், திமுக நிா்வாகிகள் முத்து, கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், அன்பு, சங்கா், அஞ்சலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.