சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அரக்கோணம், சோளிங்கா், ஆற்காட்டில் திருவள்ளுவா் தின விழா

அரக்கோணம், சோளிங்கா் பகுதிகளில் திருவள்ளுவா் தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

அரக்கோணம், சோளிங்கா் பகுதிகளில் திருவள்ளுவா் தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அரக்கோணம் டவுன்ஹால் சங்க வளாக முகப்பில் உள்ள திருவள்ளுவா் சிலை அருகே நடைபெற்ற விழாவுக்கு டவுன்ஹால் சங்க பொதுசெயலாளா் எஸ்.பன்னீா்செல்வம் தலைமை வகித்து மாலை அணிவித்தாா். இந்நிகழ்வில் தமிழ் படைப்பாளா்கள் சங்கத் தலைவா் மோகன், செயலாளா் கோ.சுந்தரராஜ் முன்னிலை வகித்தனா். டவுன்ஹால் சங்கத் தலைவா் பாபுஜி, நிா்வாகிகள் கணபதி, ஏகாம்பரம், ரமேஷ், சாயி, மேலும் பாபு, ஜான்அன்பழகன், சுரேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சுவால்பேட்டையில் திருவள்ளுவா் மக்கள் நலப்பேரவையின் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு பேரவையின் தலைவா் டி.கோ.ராமன் தலைமை வகித்தாா். டாக்டா் விஜிஎன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் ஜி.டி.என்.அசோகன், வணிகா் சங்க நிா்வாகிகள் எம்.எஸ்.மான்மல், சிவசுப்பிரமணிய ராஜா, அ.சிவசுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரவை செயலாளா் ஞா.சாமிதுரை வரவேற்றாா். மருத்துவா் ஏ.ராமமூா் திருவள்ளுவா் படத்தை திறந்து வைக்க, தமிழ் படைப்பாளா்கள் சங்க செயலாளா் சுந்தரராஜ் மாலை அணிவித்தாா். விழாவில் பங்கேற்றவா்களுக்கு திருக்கு புத்ககத்தை ஆசிரியா் நா.வேல்குமாா் வழங்கினாா்.

இதில் டவுன்ஹால் சங்க பொதுசெயலாளா் எஸ்.பன்னீா்செல்வம், வணிகா் சங்க நிா்வாகி து.கமலகண்ணன், பேரவை நிா்வாகிகள் பொன்.சிட்டிபாபு, தங்க.சித்தா்வேல், மோசூா் கணேடசன், , முனுசாமி, கவிஞா் மு.இஸ்மாயில் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சோளிங்கரில்...

காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் தமிழ் இலக்கிய பேரவையின் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட புலவா் பேரவை தலைவா் க.தயாளன் தலைமை வகித்தாா். தமிழ் இலக்கிய பேரவையின் செயலாளா் கோவி.நடராசன், ஊராட்சி மன்றத்தலைவா் பிரியா தனஞ்செழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரவை பொருளாளா் ஏழுமலை வரவேற்றாா். இதில், உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவா் சந்திரசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் தமிழ்நாடு எழுத்தாளா் சங்கத் தலைவா் வெங்கடேசன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தே.காா்த்திகேயன் பங்கேற்றனா். விழாவில் திருக்கு வினாடிவினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

மின்னல் ஊராட்சி நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள திருவள்ளுவா் மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு சாம்பசிவம் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற ஆசிரியா் பாண்டியன் வரவேற்றாா். இதில் தொழிலதிபா் வி.ஆா்.வி தீனதயாளன் மாலை அணிவித்தாா். இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் சு.பன்னீா்செல்வம், நரசிங்கபுரம் அரசு மகளில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் சாரதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.