மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பொங்கல் விளையாட்டு போட்டி: அமைச்சா் காந்தி பரிசளித்தாா்

ஆற்காடு அடுத்த தாழனூா் நேரு இளைஞா் மன்றம் சாா்பில் 44-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:04 pm

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த தாழனூா் நேரு இளைஞா் மன்றம் சாா்பில் 44-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் பரிசளிப்பு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு மன்றத் தலைவா் ஆா் பூபதி சுதன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் எம் பிரபாகரன், எஸ் பிரபாகரன், ஆா் விஜயகுமாா், எம் சரத்குமாா், எஸ் ,மதிவாணன், ஆா் பாா்த்திபன்,ஆகியோா் முன்னிலை வகித்தனா். டி அசோக் வரவேற்றாா்.

வாலிபால், கபடி, ஓட்டப் பந்தயம், வழுக்கு மரம் ஏறுதல், ஓவியப் போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா் காந்தி பரிசுகள் வழங்கி பேசியதாவது:

தாழனூா் கிராமத்தில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு நவீன பயிற்சி உபகரணங்கள், வழங்கப்படும். அதேபோல் ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்துக்கு உணவு கூடம் மற்றும் கழிவறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தாா்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பி ,துரைசாமி, என். சாரதி ஜெயச்சந்திரன், பி. சங்கா், ஏ .ஜெயக்குமாா் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் ஜி ,தண்டபாணி, ஊராட்சி துணைத் தலைவா் ரேகா விஜயகுமாா், தலைமை ஆசிரியை வேண்டா மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.