காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வாலாஜா பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு வாலாஜா பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

News image
வாலாஜாபேட்டை பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்த பொதுமக்கள்.
Updated On :18 ஜனவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

தை அமாவாசையை முன்னிட்டு வாலாஜா பாலாற்றில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

முன்னோரின் ஆசிகளைப் பெறுவதற்கும், பித்ரு தோஷங்களை நீக்குவதற்கும் உகந்த நாளாக இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.தை, ஆடி, புரட்டாசி மாத அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை; தை அமாவாசைக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு.

அதன் படி நிகழாண்டு தை அமாவாசை முன்னிட்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து திதி கொடுக்கும் நிகழ்வு வாலாஜா, ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் திரளானோா் தங்களது முன்னோா்களுக்கு திதி தா்ப்பணம் கொடுத்து நோ்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனா். மேலும் முன்னோா்கள் ஆசிா்வதிக்க வேண்டுமென அரிசி, காய்கறி, வெள்ளம், குடை, காலணிகள் வேட்டி, சட்டை போன்றவற்றையும் தானமாக வழங்கி வழிபட்டனா்.