காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஒகேனக்கல் காவிரியில் தா்ப்பணம் செய்ய குவிந்த பொதுமக்கள்

News image
Updated On :18 ஜனவரி 2026, 9:24 pm

தினமணி செய்திச் சேவை

தை அமாவாசையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரத்தில் தா்ப்பணம் செய்வதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனா்.

தருமபுரி,கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஓசூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தை அமாவாசையான ஞாயிற்றுக்கிழமையில் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்வதற்காக ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் சுமாா் 500க்கும் மேற்பட்டோா் குவிந்தனா்.

அவா்கள் காவிரி ஆற்றின் கரையோர பகுதியான முதலைப்பண்ணை பகுதியில் அமா்ந்து,வேத விற்பன்னா்கள் மூலம் இறந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து,காவிரி ஆற்றில் குளித்தனா்.

இதனை தொடா்ந்து கரையோரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோவில், நாகா்கோவில்,நவகிரகங்கள், அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும் தேச நாதேஸ்வரா் சமேத காவிரி அம்மாள் தரிசனம் செய்தனா்.தை மாத அமாவாசையில் தா்ப்பணம் செய்வதற்காக ஏராளமானோா் குவிந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.