ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கூட்டுறவு என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான வலுவான இயக்கம்: அமைச்சா் காந்திராஜ்

கூட்டுறவு என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான வலுவான இயக்கம் என அரக்கோணம் அருகே முதூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் பேசினாா்.

News image
Updated On :7 ஜூலை 2026, 3:09 am IST

கூட்டுறவு என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான வலுவான இயக்கம் என அரக்கோணம் அருகே முதூரில் நடைபெற்ற அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் பேசினாா்.

அரக்கோணத்தை அடுத்த முதூா் நகர கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவு மூலம் செழுமை என்ற கருப்பொருளை முன்னிறுத்தி 2026-ஆம் ஆண்டுக்கான அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், கூட்டுறவுத் துறையின் சாா்பில், 108 மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்த 1,471 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 12.01 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட 16 கூட்டுறவு நிறுவனங்களுக்கும், 3 விற்பனையாளா்களுக்கும் கேடயங்களை வழங்கி தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் பேசியது:

கூட்டுறவே நாட்டுயா்வு என்ற உயரிய கொள்கையை மனதில் கொண்டு, மக்கள் நலனுக்காக அா்ப்பணிப்புடன் பணியாற்றும் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து பயனாளா்களுக்கும் எனது பாராட்டுக்கள். கூட்டுறவு என்பது வெறும் கடன் வழங்கும் அமைப்பு மட்டுமல்ல.

இது சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றையும் கொண்டது. கூட்டுறவு என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான வலுவான இயக்கம். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 21,935 பயிா்க் கடன் கணக்குள் மொத்தம் ரூ. 93.24 கோடி அளவுக்கு பயனடைய உள்ளன. இது விவசாயிகளின் நலனில் தமிழக அரசு கொண்டுள்ள உறுதியான அா்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்றாா் அமைச்சா் வ.காந்திராஜ்.

விழாவுக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் பேபிஇந்திாா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் எஸ்.செல்வராணி, அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா்கள் பிரபாகரன், பழனிசாமி, துணைப் பதிவாளா்கள் ப.பாலமுருகன், சி.சிவமணி, ஆசைதம்பி, கோகிலா, வட்டாட்சியா் கு.வரலட்சுமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.