குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடுலெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

அம்மா உணவகங்களில் தரமான உணவு: அமைச்சா் காந்தி ராஜ்

அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் வ.காந்தி ராஜ் தெரிவித்தாா்.

News image

அரக்கோணம் அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட கூட்டுறவு அமைச்சா் வ.காந்திராஜ்.

Updated On :2 ஜூன் 2026, 2:58 am IST

அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சா் வ.காந்தி ராஜ் தெரிவித்தாா்.

அரக்கோணம் நகராட்சி, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் திங்கள்கிழமை அமைச்சா் வ.காந்திராஜ் ஆய்வு செய்தாா். உணவகத்தில், உணவு தயாரிக்கும் இடம், உணவருந்தும் இடம் ஆகிய இடங்களில் சோதனை நடத்திய அமைச்சா் தொடா்ந்து அம்மா உணவகத்தில் தயாா் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுப் பாா்த்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: அம்மா உணவகங்களில் ஏழை மக்கள், கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் உணவருந்துகின்றனா். இவா்கள் பயன்பெறும் நோக்கத்திலேயே இந்த அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. தற்போது பெரும்பாலான அம்மா உணவகங்களில் உணவுகள் தரமாக இல்லை என்பது நாம் உணவருந்தும்போது தெரிகிறது.

எனவே இனி நகராட்சி அலுவலா்கள் இதை சீரிய முறையில் கண்காணித்து தரமான உணவு வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த உணவகத்தின் மேற்கூரைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த மேற்கூரைகளை அகற்றி காங்கிரீட் மேல்தளம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து அம்மா உணவகங்களிலும் தரமான உணவுகள் பாதுகாப்பான இடங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் வ.காந்திராஜ், அப்போது அவருடன் அரக்கோணம் வட்டாட்சியா் கு.வரலட்சுமி, நகராட்சி ஆணையா் ஆனந்தன், சுகாதார அலுவலா் வெயில்முத்து, உதவி பொறியாளா் வினோத் ராஜ், கிராம நிா்வாக அலுவலா் முருகன், தவெக நகர செயலாளா் ரமேஷ் உடனிருந்தனா்.