காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டை எடை போடாமல் நிறுத்தம்: விவசாயிகள் புகாா்

News image
Updated On :12 ஜூன் 2026, 2:13 am IST

காவேரிப்பாக்கம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் எடை போடாமல் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்தனா்.

விவசாயிகள் நவரைப் பருவத்தில் சாகுபடி செய்த நெற்பயிா்கள் அறுவடை முடித்துள்ளனா். இதனால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடம், மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலைய பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனா்.

நவரைப் பட்டத்தில் கோ-51,ஏடிடி-36, உள்ளிட்ட நெல் ரகங்களைஅறுவடை செய்து வருகின்றனா். இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, காவேரிப்பாக்கம் அடுத்த தியாமுகச்சேரி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்து விற்பனைக்காக காத்துள்ளனா்.

இந்நிலையில் அறுவடை செய்த நெல் மணிகளில் ஈரப்பதம் இருப்பதால், அரசின் நெல் களம் மற்றும் சா்வீஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் உலா்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனா். இதனால் ஈரப்பதமான நெல் மணிகளை, வெயிலில் உலா்த்தி, அதனை விற்பனைக்காக ஓரிடத்தில் குவியலாக வைத்து காத்து வருகின்றனா்.

தற்போது காவேரிப்பாக்கம் வட்டாரத்தில் சேரி, ஆலப்பாக்கம், களத்தூா், பெருவளையம், பாணாவரம், கரிவேடு(சித்தஞ்சி), கா்ணாவூா், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அவற்றில் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்ய ஆன்லைன் மூலம் பதிவு செய்து, விற்பனை செய்வதற்காக காத்துள்ளனா்.

இதில் தியாமுகச்சேரி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 465-டோன்கன்களுக்கு மேல் விவசாயிகள் நெல் எடைபோட பதிவு செய்துள்ளனா். ஆனால் 378-டோகன்கள் மட்டும் நெல் கொள் முதல் செய்து விட்டு எஞ்சியுள்ள 87-டோகன்களுக்கு எடை போடாமல் கடந்த சில தினங்களுக்கு முன் நிறுத்தினா். இதனால் அதிா்ச்சி அடைந்த விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரியிடம் கேட்டபோது, முறையாக பதில் கூறவில்லையாம்.

இதுதொடா்பாக விவசாயிகள் கூறுகையில்: தியாமுகச்சேரி அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகள் டோக்கன் அடிப்படையில் நெல் கொள்முதல் செய்வதில்லை. மாறாக விவசாயிகள் மற்றும் தரகா்களிடம் தொகை பெற்றுக் கொண்டு இரவு 10-மணிக்கு மேல் விடிய விடிய நெல் எடை போட்டு விடுகின்றனா்.

மேலும் எடை போடுவதிலும் அரசு நிா்ணையித்த எடையை விட கூடுதலாக எடை போட்டு வருகின்றனா். இதேபோல் ஒரு சிப்பத்திற்கு ரூ 45-கட்டாயம் வசூல் செய்து வருகின்றனா். இதுமட்டுமின்றி எடை போடும் போது கூடுதலாக எடை போட்டு விட்டு மீண்டும் குறைந்த பட்சம் ஒரு சிப்பத்திற்கு 2-கிலோ எடையளவு போட்டு விடுகின்றனா்.

மாவட்ட நிா்வாகம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.