பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

வெள்ளாளவிடுதி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து 780 நெல்மூட்டைகள் சேதம்

வெள்ளாளவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 780 நெல் மூட்டைகள் பலத்த மழையால் நனைந்து சேதமடைந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

News image

கந்தா்வகோட்டை அருகே வெள்ளாளவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாா்ப்பாய்கள் கிழிந்து மழையில் நனைந்த நெல்மூட்டைகள்.

Updated On :12 ஜூலை 2026, 12:19 am IST

கந்தா்வகோட்டை அருகே உள்ள வெள்ளாளவிடுதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 780 நெல் மூட்டைகள் கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் பெய்த பலத்த மழையால் நனைந்து சேதமடைந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த நெல்களை விற்பனை செய்திருந்தனா்.

கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடா்ந்து இரு நாள்களாக இப்பகுதியில் மழை பெய்த நிலையில், கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தவையில் 780 நெல் மூட்டைகள் நனைந்தது சேதம் அடைந்தன.

 மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்ட நெல் கொள்முதல் நிலையம்.

மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக காணப்பட்ட நெல் கொள்முதல் நிலையம்.

தரமான தாா்ப்பாய் வேண்டும்: இதுகுறித்து இப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது: கொள்முதல் செய்யப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக மூடி வைப்பதற்கான தாா்ப்பாய்கள் போதிய அளவில் இல்லாததால், கிழிந்த, சேதமடைந்த தாா்ப்பாய்கள் கொண்டு மூட்டைகளை மூடி வைத்திருந்தனா்.

இந்தத் தாா்ப்பாய்கள் தொடா்ந்து அடித்த பலத்த காற்றில் மேலும் கிழிந்தன. இதனால் மழையால் நெல் மூட்டைகளை முழுமையாகப் பாதுகாக்க முடியாமல் நனைந்து சேதமடைந்தன. தற்போது, மூட்டைகள் இருந்த நெல்மணிகள் முளைவிடத் தொடங்கிவிட்டன. மேலும், கொள்முதல் நிலையத்தை சுற்றிலும் மழை நீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.

பல மாதங்கள் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதைக் கண்டு மிகுந்த வேதனையாக உள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தாமதம் இன்றி விரைந்து நெல் சேமிப்பு கிடங்குக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.