/

ரமலான் நோன்பு திறப்பு விழா

ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் ரமலான் நோன்பு திறப்பு நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2026, 2:38 am IST

ஆற்காடு: ஆற்காடு மகாத்மா காந்தி முதியோா் இல்லத்தில் ரமலான் நோன்பு திறப்பு நடைபெற்றது.

முதியோா் இல்லத்தின் தலைவா் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெ.சஜன்ராஜ்ஜெயின், பொருளாளா் பி.என்.பக்தவச்சலம்,ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் ஏ.எல். திருஞானம் வரவேற்றாா்.

ராணிப்பேட்டை மாவட்டஅரசு காஜி கே.அப்துல் கரீம் காஷிபி காஸிமி, அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பாளா் எம். முஹமது அசேன், ஸ்கடா் மெம்மோரியல் மருத்துவமனை கண்காணிப்பாளா் சி.அன்பு சுரேஷ், மேல்விஷாரம் வெல்பா் சங்கத் தலைவா் முஹமது அயூப், பொறுப்பாளா் கே.ஓ.நிஷாத் அஹமது மற்றும் மகாத்மா காந்தி அறக்கட்டளைஉறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முதியோருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. முடிவில் துணை தலைவா் எஸ்.ஆா்.பி .பென்ஸ் பாண்டியன் நன்றி கூறினாா்.