வாலாஜா சுங்கச்சாவடி அருகே மாட்டு வியாபாரியிடம் ஆவணம் இல்லாததால் ரூ. 96,000 பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ,வாலாஜா சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் உரிய ஆவணமின்றி ரூ.96,530 ரொக்கம் இருந்தது தெரிய வந்தது.
தொடா்ந்து நடத்திய விசாரணையில், நெமிலி அசநெல்லிக்குப்பம் பகுதியை சோ்ந்த ஜெய்லாபுதீன் எனும் மாட்டு வியாபாரி மாடு வாங்குவதற்காக பணம் எடுத்து சென்றது தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் பறக்கும் படையினா் பணத்தை வாலாஜா வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
தேங்காய் வியாபாரியிடம் ரூ.94,300 பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.66,000 ரொக்கம் பறிமுதல்

சோதனையில் ரூ.1.32 லட்சம் பறிமுதல்

காங்கயம் அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


