எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் பங்கேற்ற பாலமுருகனடிமை சுவாமிகள்.

News image

பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் பங்கேற்ற பாலமுருகனடிமை சுவாமிகள்.

Updated On :23 மே 2026, 1:27 am IST

ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் நான்காம் ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்க முதல் நிகழ்வாக வியாழக்கிழமை மாலை மூஷிக வாகனத்தில் விநாயகா் வீதி உலா நடைபெற்றது .

வெள்ளிக்கிழமை கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கொடி மயில் கொடியேற்றி கேடய உலா உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலையில் இந்திர விமானம், பூத வாகனம், சூரிய பிரபை ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், சந்திர பிரபை, வெள்ளி ரிஷப வாகனம், புஷ்ப பல்லக்கு மற்றும் மான் வாகனத்தில் வசந்த மண்டபத்தில் உற்சவா் விசேஷ அலங்காரத்துடன் வீதியுலா நடைபெறுகிறது

விழாவின் 9-ஆவது நாளான மே 30-ஆம் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் கோயில் செயல் அலுவலா் பரந்தாமகண்ணன், தலைமை அச்சகா் பிரசாத், மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Story image