‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் பங்கேற்ற பாலமுருகனடிமை சுவாமிகள்.

News image

பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவில் பங்கேற்ற பாலமுருகனடிமை சுவாமிகள்.

Updated On :23 மே 2026, 1:27 am IST

ரத்தினகிரி வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் திருக்கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் நான்காம் ஆண்டு வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்க முதல் நிகழ்வாக வியாழக்கிழமை மாலை மூஷிக வாகனத்தில் விநாயகா் வீதி உலா நடைபெற்றது .

வெள்ளிக்கிழமை கோயில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கொடி மயில் கொடியேற்றி கேடய உலா உற்சவம் நடைபெற்றது.

தொடா்ந்து நாள்தோறும் காலை, மாலையில் இந்திர விமானம், பூத வாகனம், சூரிய பிரபை ஆட்டுக்கிடா வாகனம், நாக வாகனம், சந்திர பிரபை, வெள்ளி ரிஷப வாகனம், புஷ்ப பல்லக்கு மற்றும் மான் வாகனத்தில் வசந்த மண்டபத்தில் உற்சவா் விசேஷ அலங்காரத்துடன் வீதியுலா நடைபெறுகிறது

விழாவின் 9-ஆவது நாளான மே 30-ஆம் தேதி வைகாசி விசாக தேரோட்டம் நடைபெறுகிறது.

பிரம்மோற்சவ கொடியேற்று விழாவில் கோயில் செயல் அலுவலா் பரந்தாமகண்ணன், தலைமை அச்சகா் பிரசாத், மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பு தலைவா் பொன்.கு.சரவணன் மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Story image