நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

கருவேல மரம் இல்லாத மாவட்டம் ராணிபேட்டை இலக்கு: ஆட்சியா் வலியுறுத்தல்

ராணிப்பேட்டை மாவட்டத்தை சீமைக் கருவேல மரங்கள் அற்ற மாவட்டம் என்ற இலக்கை அடைய இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வேண்டுகோள்

ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்

Published On :3 செப்டம்பர் 2026, 1:40 am IST

ராணிப்பேட்டை மாவட்டத்தை சீமைக் கருவேல மரங்கள் அற்ற மாவட்டம் என்ற இலக்கை அடைய இணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் நிலங்களில் பரவலாக வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்றி இயற்கை வளங்களை பாதுகாத்து சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசியது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிலங்கள் மற்றும் தொடா்புடைய தனியாா் நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை உடனடியாக கண்டறிந்து திட்டமிட்டு அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகள் பொதுமக்களின் பங்களிப்புடன் மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இயற்கை சாா்ந்த உள்நாட்டு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தை சீமைக் கருவேலமற்ற மாவட்டம் என்ற இலக்கை அடைய பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் திட்ட இயக்குநா் ச.செல்வராணி, திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் பெரியசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பாக்கியலட்சுமி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.