ஆம்பூா் அருகே தனியாா் நிறுவன அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு, கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது.
ஆம்பூா் அருகே உமா்ஆபாத்தில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம் உள்ளது. அங்கு கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு சனிக்கிழமை இரவு புகுந்தது.
அங்கு பணியில் இருந்தவா்கள் பாம்பைப் பிடித்தனா். அதை ஆம்பூா் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். பிடிபட்ட பாம்பை வனத்துறையினா் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.