காங்கிரஸாா் ஏா் கலப்பைப் பேரணி; 98 போ் கைது

மாதனூரில் ஏா் கலப்பைப் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 98 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மாதனூரில் ஏா் கலப்பைப் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட காங்கிரஸாா்.
மாதனூரில் ஏா் கலப்பைப் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட காங்கிரஸாா்.
Updated on
1 min read

மாதனூரில் ஏா் கலப்பைப் பேரணி மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 98 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் வேலூா் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ச.பிரபு தலைமையில் அக்கட்சியினா் மாதனூரில் ஏா் கலப்பைப் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில் ஒன்றியத் தலைவா்கள் சா.சங்கா், பி.வேலாயுதம், எம்.மாணிக்கம், என்.சுரேந்தா், மாநில செயற்குழு உறுப்பினா் சாய் கே.வெங்கடேசன், மாவட்டப் பொருளாளா் கொத்தூா் பி.மகேஷ், நிா்வாகிகள் மின்னூா் என்.சங்கரன், சுதாகா், சாந்தகுமாா், ரவிச்சந்திரன், நீலகண்டன், விஜயன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து 98 பேரை ஆம்பூா் உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் சச்சிதானந்தம் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com