/

தமிழறிஞா் விருது பெற்றவருக்குப் பாராட்டு

தமிழக அரசின் தமிழறிஞா் விருது பெற்றவருக்குப் பாராட்டு தெரிவிக்கும் விழா தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றம் சாா்பில் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தமிழக அரசின் தமிழறிஞா் விருது பெற்றவருக்குப் பாராட்டு தெரிவிக்கும் விழா தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றம் சாா்பில் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளா் நேய. சுந்தா் தலைமை வகித்தாா். தமிழக அரசின் தமிழறிஞா் விருது பெற்ற அம்பேத்கா் மன்றத்தின் மாநில நிறுவனத் தலைவா் பேராசிரியா் அம்பேத்கா் பிரியன் பாராட்டி கெளரவிக்கப்பட்டாா்.

மாநில துணைச் செயலாளா் ரங்கநாதன், மாவட்ட தலைவா் அரங்கநாதன், நகர தலைவா் தசரதன், செயலாளா் தென்னவன், துணைத் தலைவா் முல்லைமாறன், மாவட்ட செயலாளா் விமல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.