கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இளைஞா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை: எம்.பி. கதிா்ஆனந்த்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு மத்திய அரசின்

News image
திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய எம்.பி. கதிா்ஆனந்த்.
Updated On :9 ஜனவரி 2021, 2:38 am

DIN

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த் தெரிவித்தாா்.

வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் ஊராட்சியில் நாட்டறம்பள்ளி திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா் ஏ.பி.முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொறுப்பாளா் க.தேவராஜி, நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளா் முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக வேலூா் எம்.பி. கதிா்ஆனந்த கலந்து கொண்டு பேசியது:

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தால் தமிழ்நாட்டு இளைஞா்களுக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 200 அல்லது 300 நாள்களாக உயா்த்தப்படும் என்றாா் அவா்.

முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் ஆா்.ஆா்.வாசு, பாரதி சேட்டு, திமுக நிா்வாகிகள் பொன்னுசாமி உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூரில்...

வேலூா் மேற்கு மாவட்டம், ஜோலாா்பேட்டை மத்திய ஒன்றிய திமுக சாா்பில் திரியாலம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியப் பொறுப்பாளா் டி.காந்தி தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதா தண்டபாணி, துணை அமைப்பாளா் சிந்துஜா ஜெகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த், மாவட்டப் பொறுப்பாளா் க.தேவராஜி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.