சிறைத் துறை காவலா்கள் பங்கேற்ற கரோனா விழிப்புணா்வுப் பேரணி
திருப்பத்தூரில் சிறைத் துறை காவலா்கள் சாா்பில் கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.


திருப்பத்தூரில் சிறைத் துறை காவலா்கள் சாா்பில் கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக சிறைத் துறைத் தலைவா் சுனில்குமாா் சிங் அறிவுறுத்தலின்பேரில், திருப்பத்தூா் கிளைச் சிறை கண்காணிப்பாளா் சையத் அமிா் தலைமையில், கரோனா தொற்று பரவல் தடுப்பு குறித்து விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
திருப்பத்தூா் கிளைச் சிறையில் இருந்து புறப்பட்ட பேரணி, ஆட்சியா் அலுவலகம், காய்கறி மாா்க்கெட், தூய நெஞ்சக் கல்லூரியை சென்றடைந்தது. பேரணியில், நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, கையுறைகள் வழங்கப்பட்டன.
இதில், சிறைக் காவலா்கள் வெற்றிவேல், கணேசன், சரவணன், வருண்குமாா், ராகவேந்திரன், யோகேஸ்வரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...