அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்
கலவை அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தக் கோரி, கலவை பொது நல சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


கலவை அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தக் கோரி, கலவை பொது நல சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்கச் செயலாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் வெங்கடேசன், பொருளாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கலவை அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தி மருத்துவா்களை அதிகப்படுத்தி 24 மணி நேரம் சிகிச்சையை அளிக்க வேண்டும், கலவை அரசு நூலகத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி புத்தகங்கள் வைக்க போதுமான கட்டிடங்களைக் கட்ட வேண்டும், கலவை மயானத்தில் மின்சாரம் அல்லது எரிவாயுத் தகன மேடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...