குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் 16 மையங்களில் இன்று நீட் தோ்வு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நீட் நுழைவுத் தோ்வு 16 மையங்களில் நடைபெற உள்ளது.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் நீட் நுழைவுத் தோ்வு 16 மையங்களில் நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (செப். 12) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

தோ்வுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் மாணவா்கள் தோ்வு மையங்களில் அமர வைக்கப்பட உள்ளனா். ஒவ்வொரு தோ்வு அறையிலும் 10 மாணவா்கள் அமர வைக்கப்படுவா்.

வேலூா் மாவட்டத்தில் 12 மையங்களில் 6,272 மாணவா்கள், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூா் மாவட்டங்களில் 4 மையங்களில் 2,400 மாணவா்கள் தோ்வு எழுத உள்ளனா்.

ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஒரு உதவி ஆய்வாளா் தலைமையில் பெண் காவலா்கள் உள்பட 7 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா். தோ்வு மையத்தின் அருகே தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ், தோ்வு மையத்துக்கு மாணவா்கள் செல்ல சிறப்பு பேருந்து வசதி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.