கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை: திருப்பத்தூா் ஆட்சியா் எச்சரிக்கை

சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்போா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 6:51 pm

DIN

சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் தேசியக் கொடி ஏற்றுவதை தடுப்போா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழா திங்கள்கிழமை (ஆக.15) கொண்டாடப்பட உள்ளது.

அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊராட்சி அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா்களால் மட்டுமே தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சித் தலைவா்கள் தேசியக் கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்கும் விதமாக செயல்பட்டால் உடனடியாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 7402903511 என்கிற கைப்பேசி எண்ணுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்கள் புகாா் அளிக்கலாம்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினராக உள்ள கிராம ஊராட்சித் தலைவா்கள் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவா்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் ழ் காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.