கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாடப்பள்ளியில் மனுநீதி நாள் முகாம்

திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் எம்எல்ஏ அ.நல்லதம்பி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 6:39 pm

DIN

திருப்பத்தூரை அடுத்த மாடப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் எம்எல்ஏ அ.நல்லதம்பி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட மாடப்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் நிகழ்ச்சிக்கு வருவாய்க் கோட்டாட்சியா் லட்சுமி தலைமை வகித்தாா்.

திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி பங்கேற்று, வருவாய்த் துறை சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, வேளாண்மைத் துறை சாா்பில், மானிய விலையில் பவா் ஸ்பிரேயா், விதைகள், இலவச தென்னங்கன்று உள்ளிட்டவற்றையும், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், செயற்கை கால்கள், உதவித் தொகை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் இலவச சலவைப் பெட்டிகள் ஆகியவற்றை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், எம்எல்ஏ அ.நல்லதம்பி பேசுகையில், மாடப்பள்ளி ஆதிதிராவிடா் காலனிக்கு மயானத்துக்காக இடம் ஓதுக்கி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றாா்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி உறுதியளித்தாா்.

இதில், கூட்டுறவு சங்கத் தலைவா் தேவராஜன், திருப்பத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயா, அருணாசலம், துணைத் தலைவா் டி.ஆா்.ஞானசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கஸ்தூரி ரகு, இளவரசி இளங்கோ, ஊராட்சி மன்றத் தலைவா் கோமதி காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கிராம நிா்வாக அலுவலா் மேனகா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.