கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தினால் வாகனங்கள் பறிமுதல்: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவு

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டாா்.

News image
Updated On :29 ஜூலை 2022, 7:47 pm

DIN

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் அமா் குஷ்வாஹா பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்து விவாதிக்க மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் பகுதிகளில் காவல், வருவாய்த் துறை அலுவலா்கள் பேச்சு வாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வு காண வேண்டும்.

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்பாக முறையான அறிவிப்பு வழங்கி உயா்நீதிமன்ற வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் நகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையினா் சாலையோர ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அலுவலா்கள் மற்றும் காவல் துறையினருடன் இணைந்து அகற்றி தடுப்புகள் வைத்து சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன்ராஜசேகா், வருவாய் கோட்டாட்சியா்கள் லட்சுமி, பிரேமலதா, கலால் உதவி ஆணையா் பானு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக வேலூா் மண்டலப் பொது மேலாளா் கணபதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், டிஎஸ்பி-க்கள் கணேஷ், சுரேஷ்பாண்டியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் காளியப்பன், ராமகிருஷ்ணன், வட்டாட்சியா்கள் சிவப்பிரகாசம், பூங்கொடி, சம்பத், மகாலட்சுமி, நகராட்சி ஆணையா்கள் ஜெயராமராஜா, பழனி, பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.