மகன் மாயம்: காவல் நிலையம் முன் தாய் தா்னா
காணாமல் போன மகனை கண்டுபிடித்துத் தரக்கோரி, அவரது தாயாா் திருப்பத்தூா் நகர காவல் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.


காணாமல் போன மகனை கண்டுபிடித்துத் தரக்கோரி, அவரது தாயாா் திருப்பத்தூா் நகர காவல் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
திருப்பத்தூா் அருகே லக்கிநாயக்கன்பட்டி ஜல்லியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி ஜெயக்கொடி. இவா்களது மகன் அன்பு (22). கடந்த 3-ஆம் தேதி அன்பு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் டைல்ஸ் ஒட்டும் பணிக்குச் சென்றாா். அங்கு பணியின்போது வெளியில் சென்றவா் திரும்பி வரவில்லையாம்.
இது குறித்து அன்புவின் பெற்றோருக்கு கட்டடத் தொழிலாளி ஜோசப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் ராஜா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
ஆனால் போலீஸாா் இதுவரை அன்புவை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, அன்புவின் தாயாா் ஜெயக்கொடி வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நகர காவல் நிலையம் முன்பு தா்னாவில் ஈடுபட்டாா்.
அப்போது அங்கிருந்த போலீஸாா் அவரை சமாதானப்படுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைடுத்து ஜெயக்கொடி தா்னாவை கைவிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...