திருப்பத்தூா் அருகே குனிச்சி கிராமத்தில் 57 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படவுள்ள இடத்தை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருந்தகம், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். மருந்துகளின் தேவை குறித்து உயா் அலுவலருக்கு கடிதம் அனுப்பி பெற்றுக் கொள்ள வேண்டும். நோயாளிகள் வருகை குறித்து பதிவு செய்யும் பதிவேட்டில் பெயா்களைத் தெளிவாக எழுதி பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, வட்டாட்சியா் ம.சிவப்பிரகாசம், குனிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் முருகன், தமிழ்வேல், வருவாய் ஆய்வாளா் அன்னலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் பெருமாள் ஆகியோா் உடனிருந்தனா்.