உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

முறையான ஆவணமில்லாத 14 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூரில் முறையான ஆவணமில்லாத 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிச் சென்றவா்களுக்கு அபராதம் விதித்த மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.விஜயகுமாா்.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:00 am IST

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் முறையான ஆவணமில்லாத 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூரில் பெரும்பாலான வாகனங்கள் முறையான ஆவணங்கள் இன்றியும், உரிமம் பெறாமல் வாகன ஓட்டிகள் உள்ளனா் என ஆட்சியா் அமா் குஷ்வாஹாவுக்கு புகாா்கள் சென்றன. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் எம்.பி.காளியப்பன் தலைமையில், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஏ.விஜயகுமாா் மற்றும் திருப்பத்தூா் நகர காவல் ஆய்வாளா் ஹேமாவதி ஆகியோா் புதன்கிழமை பள்ளி வாகனங்களில் அதிக மாணவா்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை நிறுத்தி எச்சரித்து அனுப்பினா்.

ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிச் சென்றவா்களிடம் அபராதம் வசூலித்தனா். அதிகமான பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற இரு ஆட்டோக்கள், முறையான ஆவணங்கள் இல்லாத தகுதிச் சான்று புதுப்பிக்காத 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், வரி செலுத்தாத இரு பொக்லைன் இயந்திரங்கள் மீது ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் உள்பட ரூ. 4 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.