வனத்துறை போட்டிகள்: மாணவா்கள் பங்கேற்கலாம்
திருப்பத்தூா் வனக் கோட்டம் சாா்பில், மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளதாக வனச்சரக அலுவலா் எம்.பிரபு தெரிவித்துள்ளாா்.


திருப்பத்தூா் வனக் கோட்டம் சாா்பில், மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளதாக வனச்சரக அலுவலா் எம்.பிரபு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் வனக் கோட்டம் சாா்பில் வன உயிரின வார விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு ‘ஆரோக்கியமான எதிா்காலத்துக்கு வன உயிரினங்களுக்கு மதிப்பளித்தல்’ என்ற தலைப்பில் ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தப் போட்டிகள் திருப்பத்தூா் ரயில் நிலைய சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை (அக்.3) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, மாவட்ட வன அலுவலா் நாகசதீஷ் கிடிஜாலா ஆகியோரால் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...