வாணியம்பாடி: வாணியம்பாடி பகுதியில் ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் கூய81.54 லட்சம் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வாணியம்பாடி பகுதிகளில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு காவலூா், நிம்மியம்பட்டு, தும்பேரி ஆகிய பகுதிகளில் வாகன சோதனை மேற்கொண்டதில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றதாக 3 பேரிடம் ரூ.81.54 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
இத்தொகை கருவூலத்தில் வைக்கப்பட்டு திருப்பத்தூா் மாவட்ட மேல் முறையீட்டு குழுத் தலைவா் மூலமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.81. 54 லட்சம் உரிய நபா்களிடம் வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் உதவி தோ்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான அஜிதாபேகம் ஒப்படைத்தாா். வாணியம்பாடி வட்டாட்சியா் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய்த் துறையினா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சிவகாசியில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்

கட்டுமானப் பணிக்கு கொண்டு சென்ற ரூ. 80,490 பறிமுதல்: அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

கீழையூா் அருகே ரூ.97 ஆயிரம் பறிமுதல்

தகுதியின் அடிப்படையில் விடுவிக்கப்படும் பறிமுதல் பணம்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


