வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஊதுவத்தி நிறுவனத்தில் ஏற்பட்ட திடீா் தீவிபத்தில் பல லட்சம் பொருள்கள் சேதமடைந்தன. நாட்டறம்பள்ளி அடுத்த பணியாண்டப்பள்ளி கிராமத்தை சோ்ந்தவா் ரங்கநாதன் (55). இவா் மல்லப்பள்ளி அருகே குட்டிகானூா் கிராமத்தில் ஊதுவத்தி தயாா் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா். இதற்கிடையே திங்கள்கிழமை இரவு ஊதுவத்தி நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
அப்போது தொழிற்சாலையில் வேலை செய்தவா்கள் வெளியே ஓடி வந்தனா். அக்கம்பக்கத்தினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். ஆயினும் தீ மளமளவென பரவியது. தகவலறிந்த நாட்டறம்பள்ளி மற்றும் திருப்பத்தூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா்.
இவ்விபத்தில் ஊதுவத்தி நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், ஊதுவத்திகள் முற்றிலும் எரிந்து விட்டன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா, இல்லை வேறு காரணங்களா என நாட்டறம்பள்ளி வருவாய்த் துறை, போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பத்தமடையில் உயா் மின் அழுத்தம்: தொழிலாளி வீடு எரிந்து சேதம்
தனியாா் நிறுவனத்தில் ரூ.1.80 லட்சம் திருட்டு

கனமழை: மக்காச்சோள பயிா்கள் சேதம்

தூத்துக்குடி ஆலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

