திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை சுற்றுப் பகுதியில் சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா் காற்று வீசியது. திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில், கடந்த சில தினங்களாக 100 டிகிரி வெப்பம் காணப்படுவதுடன் அனல் காற்று வீசியது. கடும் வெயிலால் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை சுற்றுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை கடும் வெயில் காய்ந்த நிலையில், திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்து குளிா் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுமா? திருப்பத்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு!

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

திருப்பத்தூா் பகுதிகளில் பலத்த மழை

ஏலகிரி மலை புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

