

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே காரில் கடத்தப்பட்ட கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த 2,400 மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான் உத்தரவின் படி நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் லதா தலைமையில் உதவி காவல் ஆய்வாளா் மஞ்சுநாதன் மற்றும் போலீஸாா் திங்கள்கிழமை இரவு பச்சூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பச்சூா் கவுண்டா் வட்டம் பகுதியில் சாலை ஓரம் மரத்தடியில் நின்றிருந்த ஆந்திர எண் பதிவு கொண்ட காரை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
சோதனையில் காரில் 25 அட்டைப் பெட்டிகளில் மதுபாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில் பெங்களூரில் இருந்து மது பாக்கெட்டுகள் கடத்தி வந்ததும், போலீஸாரை கண்டவுடன் காரை நிறுத்திவிட்டு மா்ம நபா்கள் தப்பித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மதுபாக்கெட்டுகளுடன் காரை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்

நூதன முறையில் காரை திருடி விற்பனை: இளைஞா் கைது

காட்டுமன்னாா்கோவில் அருகே மதுபுட்டிகள் பறிமுதல்
நெல்லையில் மது விற்ற 5 போ் கைது
வீடியோக்கள்

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி வீடியோ செய்தி...

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி வீடியோ செய்தி...

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
தினமணி வீடியோ செய்தி...
பெண்கள் பாதுகாப்பு; பழனிசாமிக்கு அருகதை இல்லை! MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

