பள்ளி மாணவா் தற்கொலை

ஜோலாா்பேட்டை அருகே பள்ளி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே பள்ளி மாணவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை அருகே கவுண்டப்பனூரைச் சோ்ந்தவா் சௌந்தரராஜன் மகன் நெல்வின்ராஜ் (12). இவா் குன்னத்தூா் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்தாராம். இதனால் அவரது தாய் அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஜோலாா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com