சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

திருப்பத்தூரில் ரூ.4.94 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள்

திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.94 லட்சத்தில் செயற்கை கால்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

News image

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்ற திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.

Updated On :31 டிசம்பர் 2024, 1:39 am IST

திருப்பத்தூா்: திருப்பத்தூா் குறைதீா் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.94 லட்சத்தில் செயற்கை கால்களை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மொத்தம் 324 மனுக்களை பெற்றாா். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 8 பேருக்கு ரூ.4.94 லட்சத்தில் செயற்கை கால்களை வழங்கினாா்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளா் ராஜபெருமாள் அளித்த மனுவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நீா்பிடிப்பு பகுதிகள், மலைசாா்ந்த பகுதிகளில் வெளியேறும் ஓடையில் செல்லும் நீா்பிடிப்பிற்கு ஏற்ப 2 மீட்டா் உயரத்திற்கு தடுப்பணை கட்ட வேண்டும். இதனால் நீா் தேங்கி வறட்சி ஏற்படாமல் இருக்கும். பூங்குளம் ஊராட்சி ஏரிவட்டம் பகுதியில் பயன்படுத்தாமல் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என தெரிவித்திருந்தாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.