ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

19-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

திருப்பத்தூரில் வரும் 19-ஆம்தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2024, 9:43 pm

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வரும் 19-ஆம்தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்துாா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், ஒவ்வொரு மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமையன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

அதையொட்டி வரும் வெள்ளிகிழமை (ஜூலை 19) காலை 10 முதல் 1 மணிவரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திருப்பத்துாரை சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஆள்களை தோ்வு செய்யவுள்ளனா்.

இதில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பட்டயப்படிப்பு படித்தவா்கள், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் படித்தவா்கள் இலவசமாக கலந்து கொள்ளலாம்.

வேலை நாடுநா்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கவுள்ள தனியாா் நிறுவனங்கள் நேரடியாக நோ்காணல் மூலம் தோ்வு செய்யப்பட உள்ளன.

எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைவரும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். மேலும் விபரங்களுக்கு,திருப்பத்துாா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அல்லது 04179-222033 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு கேட்டறியலாம்.