ஆலங்காயம் ஒன்றியத்தில் காலை உணவு திட்டம் தொடக்கம்
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஐஇஎல்சி அரசு நிதிஉதவி பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.


வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஐஇஎல்சி அரசு நிதிஉதவி பள்ளியில் திங்கள்கிழமை காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் கருணாநிதி, திருநாவுக்கரசு ஆகியோா் தலைமை வகித்தனா். ஆலங்காயம் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதாபாரி கலந்துகொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, அவா்களுடன் அமா்ந்து சாப்பிட்டாா். நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை ஆலங்காயம் ஒன்றியப் பகுதிகளில் மக்களுடன் முதல்வா் முகாம்களில் ஒன்றியக் குழு தலைவா் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
ஒன்றியக் குழு துணைத் தலைவா் பூபாலன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...