ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வாணியம்பாடி முத்தமிழ் மன்ற ஆண்டு விழா தொடக்கம்

வாணியம்பாடி முத்தமிழ் மன்ற ஆண்டு விழா தொடக்கம்

News image
Updated On :2 மார்ச் 2024, 4:33 pm

வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சாா்பில் 31-ஆம் ஆண்டு முத்தமிழ் இலக்கியக் கூடல் விழா சனிக்கிழமை தொடங்கியது. விழாவில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி நக்கீரன், பொன்னம்பல அடிகளாா் ஆகியோா் கலந்து கொண்டு தொடங்கி வைத்துப் பேசினா். பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 4 மணியளவில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு அரங்கத்தில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் கலந்து கொண்டு முத்தமிழ் மன்ற ஆண்டு விழாவையொட்டி கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான கவிதை, ஓவியம், பாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். முன்னதாக தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அருள், வாணியம்பாடி வட்டாட்சியா் அஜீதா பேகம் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா். இரவு 7 மணிக்கு குறளரங்கம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் கலந்து கொண்டு பேசினாா். வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி உள்பட பலா் பேசினா்.