வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்

ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற பணம் பறிமுதல்

News image

குடியாத்தம் வட்டாட்சியா் சித்ராதேவியிடம் பறிமுதல் செய்த பணத்தை ஒப்படைத்த பறக்கும் படை குழுவினா்.

Updated On :19 மார்ச் 2024, 11:47 pm

குடியாத்தம்: போ்ணாம்பட்டு பகுதியில் ஆவணமின்றி காரில் கொண்டு செல்லப்பட்ட பணம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. போ்ணாம்பட்டு பங்களா மேடு கூட்டு ரோடு பகுதியில் பறக்கும் படை அலுவலா் சத்ய லட்சுமி, சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டா் சாந்தி மற்றும் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியிலிருந்து போ்ணாம்பட்டு வழியாக குடியாத்தம் நோக்கிச் சென்ற காரை பறக்கும் படை குழுவினா் நிறுத்தி சோதனை செய்தனா். காரில் குப்பம் சாந்திபுரம் பகுதியைச் சோ்ந்த இறைச்சி வியாபாரி மெஹ பாஷா, அவரது மனைவி தமீனா உள்பட நான்கு போ் பயணம் செய்தனா். அவா்களிடம் பறக்கும் படை குழுவினா் விசாரித்த போது தன்னுடைய மகள் திருமணத்திற்காக குடியாத்தம் பகுதியில் நகை வாங்க செல்வதாக கூறியுள்ளனா்.

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,01,000 பறிமுதல் செய்யப்பட்டது. போ்ணாம்பட்டு அடுத்த தேவலாபுரம் பகுதியில் பறக்கும் படை குழுவினா் நடத்திய வாகன தணிக்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த வாணியம்பாடி வட்டம் தட்டைமேடு பகுதியை சோ்ந்த குரு பிரசாத் மற்றும் அவரது நண்பா் ஆகியோரிடம் சோதனை செய்தனா்.

அவா்கள் உரிய ஆவணமின்றி ரூ 76,000 கொண்டு செல்வது தெரியவந்தது. நிதி நிறுவனத்தில் பணிபுரியும் அவா்கள் கடன் பெற்றவா்களிடமிருந்து தவணை வசூலித்து செல்வதும் தெரியவந்தது. அந்த பணத்தை பறக்கும் படை குழுவினா் பறிமுதல் செய்து குடியாத்தம் வட்டாட்சியா் சித்ரா தேவியிடம் ஒப்படைத்தனா்.