அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஏரியில் மண் அள்ளிய லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

மாதனூா் அருகே ஏரியில் மண் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
மண் அள்ள எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சு நடத்திய போலீஸாா்.
Updated On :11 நவம்பர் 2024, 8:19 pm

Din

ஆம்பூா்: மாதனூா் அருகே ஏரியில் மண் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஊராட்சி ஒன்றியம், தோட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட தேவிகாபுரம் பகுதியில், சுமாா் 72 ஏக்கா் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. மாதனூா் அருகே வெங்கிளி பகுதியில் நடைபெற்று வரும் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக, 10-க்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகள் மூலம் தேவிகாபுரம் ஏரியில் மண் அள்ளப்பட்டு வரப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்றத் தலைவா் தா்மேந்திரா மற்றும் கிராம மக்கள், விவசாயிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் மண் அள்ளச் சென்ற லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் வருவாய்த் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சு நடத்தினா்.

ஏரியில் பனை மரங்களை அகற்றி அளவுக்கு அதிகமான ஆழத்தில் மண் அள்ளுவதால் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும். அதனால் மண் அள்ளுவதை நிறுத்த வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகாா் மனு அளிக்க ஆட்சியா் அலுவலகத்துக்கு பொதுமக்கள் சென்றனா்.