45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய அதிகாலை முதலே காத்திருக்கும் மக்கள்

ஆதாா் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக திருப்பத்தூா் தலைமை அஞ்சலகம் முன்பு அதிகாலை முதலே பொதுமக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :6 அக்டோபர் 2024, 8:53 pm

து. ரமேஷ்

ஆதாா் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக திருப்பத்தூா் தலைமை அஞ்சலகம் முன்பு அதிகாலை முதலே பொதுமக்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பத்தூா் தலைமை அஞ்சலத்தில் ஆதாா் அட்டை திருத்தம் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. இரு கணினி மற்றும் இயந்திரங்களைக் கொண்டு ஆதாா் அட்டை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 பேருக்கு மட்டும்தான் ஆதாா் அட்டை திருத்தம் செய்யப்படுகிறது. இதற்காக அஞ்சலகத்தில் காலை 7 மணிக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

டோக்கன் பெறுவதற்றாக திருப்பத்தூா் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து அதிகாலை முதலே அஞ்சலக வாசல் முன்பு பொதுமக்கள் குவிகின்றனா்.

இதில் குழந்தைகள், மாணவா்கள், பெண்கள், முதியோா் என பல்வேறு தரப்பினா் ஆதாா் அட்டை திருத்த வரிசையில் நிற்பது பாா்ப்பதற்கு வேதனையாக உள்ளது என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியது: திருப்பத்தூா் நகரில் ஆதாா் அட்டை திருத்தம் செய்ய ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், தேசியமயமாக்கப்பட் வங்கிகள் உள்ளிட்ட 18 ஆதாா் அட்டை திருத்தும் மையங்கள் உள்ளன.

அங்கு போதுமான அலுவலா்கள் பணியில் இருப்பதில்லை. மேலும் பணியில் சுணக்கம் காட்டுகின்றனா். எனவே,பெரும்பாலான பொதுமக்கள் அங்கு செல்வதில்லை. திருப்பத்தூா் தலைமை அஞ்சலகத்துக்கு வருகை தருகின்றனா்.

இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் கூறியது:

நாங்கள் காலை 7 மணிக்கு 100 பேருக்கு மட்டுமே டோக்கன் தருகிறோம். ஒரு நாளைக்கு இரண்டு இயந்திரங்களைக் கொண்டு 100 பேருக்கு மட்டுமே திருத்தம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிகாலை முதலே வரிசையில் காத்திருக்கின்றனா்.

7 மணிக்கு வருகை தந்து டோக்கன் பெறுமாறு பலமுறை அறிவுறித்தியும் பொதுமக்கள் மழை, குளிா் காலங்களில் நிற்பது எங்களுக்கும் வேதனையாக தான் உள்ளது என்றனா்.

திருப்பத்தூா் நகரில் ஒரு சில இடங்களில் தவிர மற்ற இடங்களில் ஆதாா் அட்டை திருத்தும் பணி மெத்தனமாக நடைபெறுகிறது என பொதுமக்கள் புகாா் கூறியுள்ளனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்து ஆதாா் அட்டை திருத்தப் பணிகள் பொதுமக்களை பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் எனக் கோரியுள்ளனா்.